ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, இன்று நியுயோர்க் நேரப்படி (12-06-2025) தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. ஸ்பெயின் நாடு இதற்கான யோசனையை முன்வைத்திருந்தது. குறித்த தீர்மானத்திற்கு இலங்கை உட்பட 149 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும், 19 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொண்டன.