தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 அதிகரிப்பு – காரணம் என்ன? | Gold price surge by Rs 1120 in a single day what is the reason

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அமெரிக்க – சீனா இடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தங்கம் விலை மே 12-ம் தேதி ரூ. 2,360 வரை குறைந்து ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. மே 28-ம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கியது.

இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. காலையில் பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.71,600 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்நது, மாலையில் பவுனுக்கு ரூ.880 உயர்ந்தது. ஒருநாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.140 உயர்ந்து, ரூ.9,060-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.111 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரமாகவும் இருந்தது.

“சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!