கொழும்பு – பிலியந்தலை வீதியில் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையின் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தீயை அணைக்க கொழும்பு தீயணைப்புத் துறையின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு மேலும் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW