1848 – மாத்தளைக் கலகம் – Matale Rebellion

1848 – மாத்தளைக் கலகம் – Matale Rebellion1848ம் ஆண்டு கலகம் அல்லது மாத்தளைக் கலகம் Matale Rebellion என்று அழைக்கப்படும் இலங்கையில் பிரித்தானிய ஆளுனர் டொரிங்டன் பிரபுவின் தலைமையில் இருந்த பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக 1848 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இலங்கை வரலாற்றில் முக்கியத்துவமான ஒரு கலகமாக இது கருதப்படுகின்றது.

1815 மார்ச் 02 ஆம் திகதி மலையக உடன்படிக்கையின் மூலம் முழு நாடும் ஆங்கிலேயரிடம் சரணடைந்ததை அடுத்து 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திரம் அடையும் வரை எமது முன்னோர்கள் ஏழு ஆயுத சுதந்திரப் போராட்டங்களை முன்னெடுத்தனர். அவை 1818, ஜனவரி 1820, ஜூலை 1820, 1823 மாத்தளை, 1834, 1842 மற்றும் 1848 மாத்தளை (Matale Rebellion) ஆகியகையாகும்.

இந்தப் போராட்டங்களில் 1848 ஆம் ஆண்டு மாத்தளை புரட்சி (Matale Rebellion) என்பது பெருந்தொகையான சிங்களப் படைகள் கொல்லப்பட்ட போராகும், ஒரு ஆங்கிலேய சிப்பாய் கூட கொல்லப்படவில்லை.

1848 ஆம் ஆண்டு (Matale Rebellion) கலகத்தின் பின்னணி

1833 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த கோல்புறூக் பிரபுவின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்திய பின்னர் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

01. ஐரோப்பிய வர்த்தகர்களையும், தோட்ட உரிமையாளர்களையும் தவிர்ப்பதில் இந்த முன்மொழிவுகள் அதிக கவனம் செலுத்தின. கிராமப்புற மக்கள் மீது அவை அக்கறை கொள்ளவில்லை.

02. விவசாய சமுதாயத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கிராம அளவில் எந்த நிறுவனங்களும் இல்லாததால், மிகச் சிறிய தகராறுக்குக் கூட அவர்கள் விசாரணைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு அவர்கள் வழக்கறிஞர்களுக்கு பலியாகினர். வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டதாலும், முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கப்பட்டதாலும் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.

03. அரச தீர்வை முறை இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக, குளங்கள் மற்றும் நீர்ப்பாசனத்தின் கட்டுப்பாடு சீர்குலைந்தது, இதன் காரணமாக விவசாயம் மோசமடைந்தது.

04. ரேன்த முறையின் கீழ் நாடு முழுவதும் மதுபான நிலையங்கள் தோன்றியதால், தவறான நடத்தை பரவியது.

05. ஆங்கிலேயர் தோட்டங்களில் பயிர் செய்வதற்காக கிராம மக்களுக்குச் சொந்தமான நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியதால் கிராம மக்கள் தங்கள் பரம்பரை நிலங்களை இழந்தனர்.

06. அரச உத்தியோகத்தர்கள் பெருந்தோட்டக் கைத்தொழிலின் பால் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக அவர்களின் கடமைகள் தடைக்குள்ளாக்கப்பட்டதோடு செயலிழந்தது.

07. புத்த சமயத்தில் செய்யப்பட்ட மாற்றங்களால் பௌத்தத் துறவிகள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். மலையக ஆட்சியாளர்களும் அவற்றில் செய்யப்பட்ட மாற்றங்களால் ஏமாற்றமடைந்தனர்.

08. நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஆங்கிலேய அரசு பல புதிய வரிகளை சாதாரண மக்கள் மீது விதித்தது. இந்தப் புதிய வரிகளில் நாய் வரி, படகு வரி, சாலை வரி, உடல் வரி, துப்பாக்கி வரி போன்றவை மிகவும் நியாயமற்ற வரிகளாக காணப்பட்டது.

மேலும், ஆங்கிலேய அரசாங்கம் மேலும் 30 புதிய வரிகளை விதிக்கத் தயாராகி வருவதாக நாடு முழுவதும் செய்தி பரவியது.

இந்த வரிகளை எதிர்த்து மலையக பகுதிகளில் பல கூட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. 1818 ஆம் ஆண்டு யூலை மாதம் 6 ஆம் திகதி தும்பர நாட்டின் தளபதி மடுகல்லவுடன் கண்டி மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வரி எதிர்ப்பாளர்களின் ஒரு குழு சென்றபோது, ஆங்கிலேய இராணுவத்தினரால் தாக்கப்பட்டமை கலகம் ஏற்படுவதற்கு அண்மிய காரணமாக கருதப்பட்டது.

1818 ஆம் ஆண்டு (Matale Rebellion) கிளர்ச்சிக்கு புரண்அப்பு, கொங்கலகட பண்டா, டிங்கிராலா ஆகியோர் தலைமை தாங்கினர். ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் இருந்தனர். ஜூலை 27 இல், மாத்தளை, நுவரெ கலவ்யா, தமன்கடுவ, ஹத்த கொரளை மற்றும் ஹரிஸ்பத்து ஆகிய பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

குருநாகல் போராளிகள் டிங்கிராலவை ஏழு கோரளைக்குமான தலைவராக நியமித்தனர். அவர்கள் அங்குள்ள சிறையைத் தாக்கி அரசு நிலச் சட்டத்தை எதிர்த்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவித்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தைத் தாக்கி நிலத்தின் ஆவணங்களை எரித்தனர்.

(Matale Rebellion) கிளர்ச்சியை ஒடுக்க ஆங்கிலேயர்களின் பெரும் படை மலை நாட்டிற்கு அனுப்பப்பட்டது. ஆங்கிலேய இராணுவம் சிங்களக் கிளர்ச்சியாளர்களைத் தோற்கடிக்க முடிந்தது. புறன் அப்புவும், டிங்கிராலாவும் ஆங்கிலப் படையினரிடம் கைதாகினர். கொங்கலகொட பண்டாவும் அல்கடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

அவர்களைப் பிடிக்க கேப்டன் மெக்டொனால்ட் அனுப்பிய சிங்களப் படையின் தலைவராக தொரதியாவே நிலமே இருந்தார். 1848 ஆகஸ்ட் 4 ஆம் தேதி இரவு பம்பா விஹாரையின் வளாகத்தில் மறைந்திருந்த போது தொரதியாவே நிலமே அவர்களை கைது செய்து,​​ ஹங்குரன்கெத்தவில் கூடியிருந்த பிரிட்டிஷ் இராணுவத்தின் கேப்டன் ஜே., மெக்டொனால்ட்டின் இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் டிங்கிராலா மீது ஐந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. மகாராணியின் சட்டபூர்வமான அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கத்துடன் சதி செய்தல், ராணியின் அரசாங்கத்தின் நியாயமான ஆட்சியை கவிழ்க்க, தேசத்துரோக குழுக்களுடன் இணைந்து அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தது போன்ற குற்றச்சாட்டுகள் அதில் அடங்கும்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எந்தக் கவலையும் காட்டாத டிங்கிராலா, எந்த மாற்றமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளைக் கேட்டு விட்டு நீதிமன்ற முன்னிலையில், “குற்றச்சாட்டுகள் குறித்து தான் எதுவும் கூறுவதற்கு இல்லை” என்று கம்பீரமாக கூறினார். பின்னர் அவரை சுட்டுக் கொல்ல தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

டிங்கிரலாவைக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு 150 பவுண்கள் தருவதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்த போதிலும், டிங்கிரலவைக காட்டிக் கொடுத்த தொரட்டியாவ நிலமெக்கு ஒரு பதக்கத்தைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை.

தீர்பளிக்கப்பட்ட மூவரும் ஆங்கிலேயர்களால் பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிங்கிராலாவின் உடல் நான்கு நாட்கள் மரத்தில் தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. போரில் ஈடுபட்டவர்கள் தலதா அரண்மனைக்கு முன்னால் பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பின்னர் டிங்கிராலாவின் உடல் மரத்திலிருந்து கீழே இறக்கி, தூக்கு மரத்திலிருந்து 600 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தின் கீழ் புதைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் சாதாரண

மாத்தளைக் கலகம்

மக்கள் மீது திணித்த தீவிர அழுத்தங்களுக்கு எதிரான (Matale Rebellion) விடுதலைப் போராட்டம் இவ்வாறு முடிவுக்கு வந்தது.

டிங்கிராலாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் அவரது நினைவாக ஒரு சிங்களக் குழு ஒரு கல் தூணை அமைத்திருந்தது. அது ‘முத்தெட்டுகல’ ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே சுமார் 500 மீட்டர் தொலைவில், பிரதான சாலையின் வலது பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

1980களின் பிற்பகுதியில் குருநாகல்-திருகோணமலை சாலையின் கட்டுமானப் பணிகளின் போது, ​​பிரதான சாலை கல்லறை குழியைக் கடந்து சென்றது, அப்பொழுது குறிப்பிட்ட கல் தூண் அகற்றப்பட்டது.

பின்னர் அந்தக் கல் தூண் வடமேல் மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், டிங்கிராலாவை நினைவு கூரும் வகையில், வேளாண்மைத் துறையால் புதிய மிளகு வகைக்கு டிங்கிராலாவின் பெயரைச் சூட்டியது.


Sarinigar Main Logo, About Us, Contact Us, Privacy PolicyX

Leave a Reply

error: Content is protected !!