ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்: 4 அதிமுக நிர்வாகிகளுக்கு இடைக்கால முன்ஜாமீன் | 4 AIADMK executives granted interim anticipatory bail for attack on ambulance driver

மதுரை: ​திருச்சி அருகே அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் 108 ஆம்​புலன்ஸ் வேன் ஓட்​டுநர் தாக்கப்பட்ட வழக்​கில் நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்​கால முன்​ஜாமீன் வழங்​கப்​பட்டது.

திருச்சி மாவட்​டம் துறையூரில் பழனி​சாமி பங்​கேற்ற பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது அந்த இடத்தை கடக்க முயன்ற 108 ஆம்​புலன்ஸ் தடுத்து நிறுத்​தப்​பட்டு, ஆம்​புலன்ஸ் ஓட்​டுநர் தாக்​கப்​பட்​டார். இது தொடர்​பாக அதி​முகவைச் சேர்ந்த 10 பேர் மீது துறையூர் போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்​தனர்.

இதில் துறையூரைச் சேர்ந்த பால​முரு​கவேல் என்ற அமைதி பாலு, விக்கி என்ற விவேக், தீனத​யாளன், கலிங்​க​முடை​யான்​பட்​டியைச் சேர்ந்த பொன் காம​ராஜ் ஆகிய நிர்வாகிகள் உயர் நீதி​மன்​றத்​தில் முன்​ஜாமீன்கோரி மனுத்தாக்​கல் செய்​தனர். அதில், அதி​முக பொதுச் செய​லா​ள​ர் பழனி​சாமி, துறையூர் பேருந்து நிலை​யம் அருகே ஆக.24 அன்று மாலை பிரச்​சா​ரக் கூட்​டத்தில் கலந்​து​கொண்டார்.

அப்போது அப்​பகு​திக்கு வந்த 108 ஆம்​புலன்ஸை​யும் அதன் ஓட்​டுநரையும் தாக்​கிய​தாக துறையூர் காவல் நிலைய போலீ​ஸார் எங்கள் மீது வழக்​குப்பதிவு செய்​தனர். எங்​களுக்​கும் ஆம்​புலன்ஸ் தாக்​கப்​பட்ட சம்பவத்​துக்​கும் தொடர்​பில்​லை. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிபதி எஸ்​.மதி அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில், பழனி​சாமியின் பொதுக் கூட்​டங்​களுக்கு வேண்​டும் என்றே ஆம்​புலன்​ஸ்​களை அனுப்பி வைத்து இடையூறு செய்​கின்​றனர் என வாதிடப்​பட்​டது. இதற்கு அரசு தரப்​பில் ஆட்சேபம் தெரிவிக்​கப்​பட்​டது. பின்​னர் நீதிப​தி, மனு​தா​ரர்​கள் 4 பேருக்​கும் இடைக்​கால முன்​ஜாமீன் வழங்கி, மனு தொடர்​பாக துறையூர் காவல் ஆய்​வாளர் பதில ளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்​.8-க்கு தள்​ளிவைத்தார்.

நன்றி

Leave a Reply