36
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் (Southampton) நகரில் 19 வயது இளம் பெண் ஒருவரை போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் மீது காவல்துறையினர் உத்தியோகபூர்வமாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வியான் சுரேந்திரநாதன் பாலியல் பலாத்காரம் (Rape) 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தமை, பாலியல் செயல்பாட்டிற்கு இணங்க வைக்கும் நோக்கில், பெண்ணுக்கு மயக்கமடையச் செய்யும் அல்லது உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பொருளை வழங்கியமை, ‘வகுப்பு A’ (Class A) வகையைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட போதைப்பொருளை வைத்திருந்தமை, ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் புலம்பெயர் மக்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
________________________________________
