மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு தொன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி தொகையை சரக்கு வாகனத்துடன் மரைன் பொலிஸார் நேற்று இரவு (10) பறிமுதல் செய்துள்ளனர்.
குறித்த ஒரு தொன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி தொகை சரக்கு வாகனத்துடன் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் மண்டபம் மரைன் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 35 மூட்டைகளில் சுமார் ஒரு தொன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட காய்ந்த இஞ்சியின் மதிப்பு பல லட்சம் இருக்கலாம் எனவும் கைப்பற்றப்பட்ட சரக்கு வாகனத்தின் பதிவு எண் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வருவதாக மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரைன் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட காய்ந்த இஞ்சி மற்றும் சரக்கு வாகனமும் மண்டபத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.