இலங்கை – இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான நான்காவது போட்டி இன்று!

இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான நான்காவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு இந்தியாவின் திருவனந்தபுரத்தில் ஆரம்பமாக உள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் ஐந்து டி -20 போட்டிகளைக் கொண்ட தொடராக இது அமைந்துள்ளது.

இதுவரை நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, ஏற்கனவே இந்த இருபதுக்கு-20 தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply