தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வசித்து வரும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையும், முழுமையான குடியுரிமை சலுகைகளை வழங்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி (PMK) நிறுவனர் எஸ். ராமதாஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று (04) அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கையில் 1983 ஆம் ஆண்டு நடந்த போர் காரணமாகவும் பல்வேறு காலகட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு அடைக்கலம் வந்தனர்.
உலகின் பல நாடுகள் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன.
இந்தியாவில்தான் இலங்கை தமிழ் மக்கள் அகதி முகாம்களிலேயே ஆயுள் முழுதும் வாழ்ந்து முடிக்கிறார்கள்.
தற்போதைய தலைமுறையாவது சுதந்திரமாக வாழ வேண்டும்.
அதற்கு முதல்கட்டமாக தமிழகத்தில் தற்போது தொடங்கவுள்ள தீவிர வாக்காளர் திருத்த பணியின் போது தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவைக்கை எடுக்க வேண்டும் – என வலியுத்தினார்.
