இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – Oruvan.com

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பலர் வங்கிப் புத்தகங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் போன்ற ஆவணங்களை இழந்துவிட்டதால், இழப்பீட்டை பணமாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், டித்வா புயல் மிளகாய், மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply