81
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட் (Mahmoud Ahmadinejad) அவர்கள், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் உள்ள நார்மாக் (Narmak) மாவட்டத்தில் அமைந்துள்ள அஹ்மதிநெஜாட்டின் இல்லம் இலக்கு வைக்கப்பட்டது.
சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அஹ்மதிநெஜாட் மற்றும் அவரது பாதுகாவலர்கள் கொல்லப்பட்டதாக ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான ILNA (Iran Labour News Agency) செய்தி வெளியிட்டுள்ளது.
சில ஊடகங்கள் அவரது மரணத்தை உறுதி செய்துள்ள போதிலும், அவரது நெருங்கிய சகாக்கள் சிலர் இந்தச் செய்தியை மறுத்துள்ளதாகவும், உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் சில செய்திகள் குறிப்பிடுகின்றன.
அஹ்மதிநெஜாட் இவர் 2005 முதல் 2013 வரை ஈரானின் ஆறாவது ஜனாதிபதியாக இருமுறை பதவி வகித்தார். இஸ்ரேலை வரைபடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற அவரது முழக்கங்கள் மற்றும் ஹோலோகாஸ்ட் (Holocaust) மறுப்பு தொடர்பான கருத்துக்கள் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
சமீப காலங்களில் ஈரானின் தற்போதைய ஆட்சியாளர்களுடன் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தார். தாக்குதலின் போது அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாகச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி அஹ்மதிநெஜாட்டும் கொல்லப்பட்டிருப்பது ஈரானின் அரசியல் கட்டமைப்பில் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.
#Ahmadinejad # அஹ்மதிநெஜாட் #IranAirstrikes #Tehran #FormerPresident #முன்னாள்_ஜனாதிபதி
