‘ஈரான்-இஸ்ரேல் போரில் நேரடியாக பங்கேற்க மாட்டோம்’ – துருக்கி அதிபர் எர்டோகன் – Sri Lanka Tamil News

மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமாகும் நிலையில், துருக்கி அதிபர் ரெஜிப் தாயிப் எர்டோகன் துருக்கி நேரடியாக ஈடுபடமாட்டாது என அறிவித்தார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகி, பலர் பாதிக்கப்பட்டனர். அதேவேளை, ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் கொல்லப்பட்டனர்.

மேலும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அதாவது மனைவி, மகள், மருமகன் ஆகியோரும் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலுக்கு பதிலாக ஈரான், கத்தார், ஈராக்கின் குர்திஸ்தான், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், துருக்கியின் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது, ஆனால் துருக்கியின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை இடைமறித்து அழித்தது.

துருக்கி அதிபர் ரெஜிப் தாயிப் எர்டோகன் கூறியதாவது, “எங்கள் வான்வெளியை பாதுகாப்பதற்கான அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈரான்-இஸ்ரேல் இடையிலான போரில் துருக்கி நேரடியாகப் பங்கேற்காது. எங்கள் நாட்டின் பாதுகாப்பே எங்களது முன்னுரிமையாகும்” என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதன் மூலம், துருக்கி ஈரான்-இஸ்ரேல் மோதலின் நேரடி பங்கேற்பில் இருந்து தாமதமாக விலகி, நாட்டின் பாதுகாப்பை முன்னிலை கொடுத்து வருகிறது என்பது தெளிவாகிறது.

நன்றி

Leave a Reply