கொஹுவல துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது! – Athavan News

கொஹுவல, போதியவத்தை பகுதியில் அண்மையில் சிறுமி ஒருவர் காயமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் 30 ஆம் திகதி கொஹுவல, போதியவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனால், 16 வயது சிறுமி காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில் குறித்த குற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை வழங்குவதன் மூலம் குற்றவாளிகளுக்கு உதவிய ஒரு சந்தேக நபர் படோவிட்டவில் கைது செய்யப்பட்டார்.

கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளையைச் சேர்ந்த 32 வயதுடையவர்.

கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரிடம் இருந்து 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply