67
லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச மற்றும் மற்ற சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட லஞ்ச வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. அறிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தற்போது பிணையில் உள்ள சஷீந்திர ராஜபக்ஷா மற்றும் மற்ற சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகினா்
சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளதுடன், விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களும் மேலதிக நடவடிக்கைக்காக லஞ்ச ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், வழக்கின் முன்னேற்றத்தை அறிக்கை செய்ய ஒரு திகதி நிர்ணயிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை பரிசீலித்த நீதிமன்றம், வழக்கை மீண்டும் ஜூலை 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது.
சமீபத்தில் இடம்பெற்ற அரகலய’ போராட்டக் காலப்பகுதியில் காலத்தில் ஏற்பட்ட சொத்து சேதத்தைத் தொடர்ந்து, செவனகல பகுதியில் மஹாவலி ஆணையத்தின் நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் சொத்துகளுக்காக 8,850,000 ரூபாய் இழப்பீடு பெற அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷா உட்பட மூவர் மீது லஞ்ச ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
#ShasheendraRajapaksa #BriberyCommission #ColomboCourt #AragalayaCompensation #SevanagalaFraud #சஷீந்திரராஜபக்ஷா #லஞ்சவழக்கு #கொழும்புநீதிமன்றம் #BriberyCommission #அரகலயா #இலங்கையரசியல்
