சூப்பர் 8 சுற்று: இலங்கை–இங்கிலாந்து இன்று பல்லேகயில் மோதல்  – Sri Lanka Tamil News

இலங்கை மற்றும் இங்கிலாந்து  கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டி இன்று (22) நடைபெறுகிறது.

இந்த முக்கிய மோதல் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இரு அணிகளுக்கும் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும் முக்கிய போட்டியாக இது பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ICC T20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி நேற்று (21) பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் ஆகா முதலில் துடுப்பெடுக்கத் தீர்மானித்தார். எனினும், ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது.

இதன் அடிப்படையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply