சென்னையில் டீ, காபி விலை உயர்வு: டீ ரூ.15, காபி ரூ.20 என நிர்ணயம்! | tea coffee price hiked in chennai

சென்னை: சென்​னை​யில் இன்று முதல் டீ, காபி​யின் விலை உயர்த்​தப்​படு​கிறது. இதனால் டீ, காபி பிரியர்​கள் அதிர்ச்​சி​யடைந்​துள்​ளனர்.

ஐடி நிறு​வனங்​களில் பணி​யாற்​று​பவர்​கள் முதல் கூலி வேலை செய்​பவர்​கள் வரை அனைத்​து தரப்​பினரும் விரும்பி அருந்​தும் பான​மாக டீ, காபி இருந்து வரு​கின்​றன. பலருக்​கும் இவற்றை குடித்​தால்​தான் வேலையே ஓடும் என்​கிற வகை​யில் மக்​களின் உணவு பழக்​கவழக்​கத்​தில் தவிர்க்க முடி​யாத ஒன்​றாக மாறி​யிருக்​கின்​றன. சென்னை உள்ள பெரும்​பாலான டீக்​கடைகளில் தற்​போது டீ ரூ.12-க்​கும், காபி ரூ.15-க்​கும் விற்​பனை​யாகி வரு​கிறது. இது தவிர சிறிய அளவி​லான கடைகளில் டீ ரூ.10-க்​கும், காபி ரூ.12-க்​கும் விற்​பனை​யாகிறது.

இந்​நிலை​யில் சென்​னை​யில் பல்​வேறு இடங்​களில் டீயின் விலை அதிரடி​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. கோயம்​பேடு, அடை​யாறு, மயி​லாப்​பூர், திரு​வான்​மியூர், புரசை​வாக்​கம் உட்பட பல்​வேறு இடங்​களில் உள்ள டீக்​கடைகளின் முகப்​பில் நேற்று டீ, காபி, பூஸ்ட், ஹார்​லிக்ஸ் உள்​ளிட்​ட​வற்​றின் விலை இன்று (செப். 1) முதல் உயர்த்​தப்​படு​வ​தாக நோட்​டீஸ் ஒட்​டப்​பட்​டிருந்​தன. அதன்​படி டீயின் விலை ரூ.15 ஆகவும், காபி​யின் விலை ரூ.20 ஆகவும் நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதே​போல் லெமன் டீ – 15, பால் – ரூ.15, ஸ்பெஷல் டீ – 20, ராகி​மால்ட், சுக்கு காபி – ரூ.20, ஹார்​லிக்​ஸ், பூஸ்ட் – ரூ.25 ஆகவும் விற்​பனை செய்​யப்பட உள்​ளன. பார்​சல் டீ ரூ.45 ஆகவும், பார்​சல் காபி ரூ.60 ஆகவும், பார்​சல் பூஸ்ட் ரூ.70 ஆகவும் விற்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல் பஜ்ஜி, போண்​டா, சமோசா ஒன்​றுக்கு ரூ.15 வசூலிக்​கப்பட உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக சென்னை பெருநகர டீக்​கடை உரிமை​யாளர்​கள் சங்​கத்​தினர் கூறுகை​யில், “சென்​னை​யில் 8 ஆண்​டு​களுக்​குப் பிறகு அதாவது 2016-17-க்​குப் பிறகு டீ, காபி விலை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. அது​வும் சென்​னை​யில் வெறும் 20 சதவீதம் கடைகள் மட்​டுமே விலையை உயர்த்​தி​யுள்​ளன. மீத​முள்ள கடைகளில் படிப்​படி​யாக உயர்த்​த​வாய்ப்​புள்​ளது. பால், காபித் தூள், டீத்​தூள் விலை உயர்​வு, வாடகை, மின்​கட்டண உயர்​வு, போக்​கு​வரத்து செலவு அதி​கரிப்பு போன்ற தவிர்க்க முடி​யாத காரணங்​களால் வாழ்​வா​தா​ரத்​துக்​காக இந்த விலை உயர்​வுக்​கு நாங்​கள்​ தள்​ளப்​பட்​டிருக்​கிறோம்​” என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply