வீரகுள பொலிஸ் நிலையத்தில் கடமைப்புரியும் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர் தனது கடமை நேரத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.