தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 7 districts including Delta in Tamil Nadu today

சென்னை: தமிழகத்​தில் டெல்டா மாவட்​டங்​கள் உள்​ளிட்ட 7 மாவட்​டங்​களில் இன்று (செப்​.6) கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​து உள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக இன்று வட தமிழகத்​தில் சில இடங்​களி​லும், தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். நாளை ஓரிரு இடங்​களி​லும், 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சில இடங்​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இன்று தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை ஆகிய டெல்டா மாவட்​டங்​கள் மற்​றும் புதுக்​கோட்​டை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்​டங்​களிலும், வரும் 8-ம் தேதி ராம​நாத​புரம், சிவகங்​கை, புதுக்​கோட்​டை, டெல்டா மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் கன மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. வரும் 9-ம் தேதி கோவை மாவட்ட மலைப்​பகு​தி​கள், நீல​கிரி, தேனி, திண்​டுக்​கல், மதுரை, சிவகங்​கை, திருச்​சி, சேலம் மற்​றும் கள்​ளக்​குறிச்சி மாவட்​டங்​களி​லும், 10-ம் தேதி கோவை மாவட்ட மலைப்​பகு​தி​கள், நீல​கிரி, சேலம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, திருப்​பத்​தூர், வேலூர், ராணிபேட்​டை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம் மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​யக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான அல்​லது மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், குமரிக்​கடல் மற்​றும் மன்​னார் வளை​குடா பகு​தி​களில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 60 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக சென்னை மேட​வாக்​கத்​தில் 6 செ.மீ., ஒக்​கி​யம் துரைப்​பாக்​கத்​தில் 5 செ.மீ., பள்​ளிக்​கரணை, கண்​ணகி நகர், கோவை மாவட்​டம் சோலை​யாறு ஆகிய இடங்​களில் 4 செ.மீ., திரு​வள்​ளூர் மாவட்​டம் திரூர், கோவை மாவட்​டம் சின்​னக்​கல்​லார், நீல​கிரி மாவட்​டம்​ அவலாஞ்​சி ஆகிய இடங்​களில்​ 3 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது.

இவ்​​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நன்றி

Leave a Reply