தற்போது வெற்றிடமாக உள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றொரு பெயரை முன்மொழிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பு சபை நாளை (31) கூடவுள்ள நிலையில், இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி முன்னர் நான்கு சந்தர்ப்பங்களில் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு நான்கு பெயர்களை முன்மொழிந்தார், மேலும் அரசியலமைப்பு சபை அதன் நிர்வாக அதிகாரங்களை முறையாகப் பயன்படுத்தாததால் கணக்காய்வாளர் நாயகம் பதவி இன்றுவரை வெற்றிடமாக உள்ளதென்றும் அமைச்சர் கூறினார்.
இதனிடையே, புதிய அரசியலமைப்பு சபையின் இரண்டாவது கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஆகியோரின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.
