தாய்வானுக்கு அருகே உள்ள தீவில் 2031க்குள் ஏவுகணை அமைப்பு: ஜப்பான் அதிரைடி அறிவிப்பு – Sri Lanka Tamil News


ஜப்பான் அரசு, தாய்வானுக்கு  அருகில் உள்ள தனது மேற்குப் பகுதி தொலைதூரத் தீவான யோனகுனி (Yonaguni)யில் 2031 மார்ச் மாதத்திற்குள் மேற்பரப்பு-வான்வழி ஏவுகணைகள் (surface-to-air missiles) நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் Shinjiro Koizumi தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், முதன்முறையாகத் தெளிவான காலக்கெடு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சுயாட்சியுடன் செயல்படும் தாய்வானை தனது பகுதியாக சீனா கருதும் நிலைில், யோனகுனி தீவு தாய்வானிலிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது; தெளிவான நாள்களில் தாய்வான் கரைபகுதி அங்கிருந்து தென்படும்.

கடந்த நவம்பரில் ஜப்பான் பிரதமர், தாய்வான்மீது தாக்குதல் நடந்தால் ஜப்பானின் சுயபாதுகாப்புப் படைகள் செயல்படலாம் என பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதையடுத்து, டோக்கியோ–பீஜிங் உறவில் பதற்றம் அதிகரித்தது. 

அதற்கு பிந்தைய காலகட்டத்தில் சீனா போர் கப்பல்களை அனுப்புதல், அரிய உலோக ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல், சுற்றுலா மற்றும் கலாசார நிகழ்வுகளைத் தடைசெய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

கோய்ஸுமி அறிவிப்பின்படி, யோனகுனி தளத்தில் நடுத்தர தூர மேற்பரப்பு-வான்வழி ஏவுகணை அமைப்பு நிறுவப்படும். சுமார் 50 கிலோமீட்டர் வரையிலான தூரத்தில் இலக்குகளைத் தாக்கக்கூடிய இந்த அமைப்பு, ஒரே நேரத்தில் 100 இலக்குகளை கண்காணித்து, 12 இலக்குகளை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த அறிவிப்புக்கு சீனா உடனடி பதில் அளிக்கவில்லை. ஆனால் கடந்த நவம்பரில் கோய்ஸுமி யோனகுனி தீவிற்கு சென்றபோது, “பிராந்திய பதற்றத்தை உருவாக்கும் முயற்சி” என சீனா விமர்சித்தது. அதனைத் தொடர்ந்து சீன ட்ரோன்கள் தீவுக்கு அருகில் பறந்ததாகவும், அதற்கு பதிலளிக்க ஜப்பான் போர்விமானங்களை அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தகாயிச்சி பெரும் வெற்றி பெற்றது, பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தும் அவரது முயற்சிக்கு அரசியல் ஆதரவாக பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு தசாப்தமாக அமைதியான தீவாக இருந்த யோனகுனி, தற்போது கடலோர கண்காணிப்பு தளமாக மாற்றப்பட்டுள்ளது; அங்கு சுமார் 160 சுயபாதுகாப்புப் படையினர் பணியாற்றுகின்றனர்.

மேலும், எதிரி தொடர்பு மற்றும் ரேடார் அமைப்புகளை பாதிக்கக்கூடிய மின்தகவல் போர்திறன் பிரிவு 2026 நிதியாண்டில் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வசதிகள் மேம்படுத்தும் பணிகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து காலக்கெடு மாறலாம் என்றாலும், 2030 நிதியாண்டுக்குள் ஏவுகணை பிரிவு செயல்பாட்டுக்கு வரும் என்பது தற்போதைய திட்டமாக இருப்பதாக கோய்ஸுமி தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply