முன்னாள் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
எனினும் தம்மை கைது செய்வதைத் தடுத்து, முன் பிணையில் விடுவிக்குமாறு கோரி அவர் பிணை மனு விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார்.
இந்தப் பிணை மனு இன்று (20) கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
The post தேசபந்து தென்னகோன் கைது! appeared first on Global Tamil News.