நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது என பாதுகாப்பு துறைக்கு வரவு செலவு திட்டத்தில் முன்னுரிமை அளித்தது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது.எனவும் கடந்த 10 ஆண்டுகளில் செலவிடப்பட்ட பணம் எவ்வளவு உதவியாக இருந்தது என்பதை ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை எடுத்துரைத்தது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு படை வீரர்களுக்கு அடிப்படை உபகரணங்கள் இல்லாத ஒரு காலம் இருந்தது எனவும் நமது வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் கிடைக்கவில்லை எனவும் துப்பாக்கிகள் இருந்தாலும் அவர்களிடம் தோட்டாக்கள் இருக்காது எனவும் ஆனால் தற்போது தான் அந்த நிலை மாறி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முரண்பட்ட கோரிக்கையை நிர்வகிப்பது என்பது ஒவ்வொரு நிதியமைச்சரும் எதிர்கொள்ளும் பிரச்னையாகும் எனவும் கூடுதல் வளங்களைப் பெறுவதற்கு வரிகளை உயர்த்துவது எப்போதும் தீர்வாகாது எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இதேவேளை, நெருக்கடியின் போது அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு கணிசமாகக் கடன் வாங்க வேண்டியிருந்தது எனவும் தற்போது பொருளாதார வளர்ச்சி ஏற்பட்ட உடன் கடனைக் குறைப்பதற்கும், நிதி சமநிலையை மீட்டெடுப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

நன்றி

Leave a Reply