ஜப்பான் அரசிடமிருந்து மொத்தம் 963 மில்லியன் ஜப்பானிய யென் (அண்ணளவாக ரூ. 1.94 பில்லியன்) மானியத்தைப் பெறுவதற்காக, ஜப்பான் நாட்டிற்கான தனது வரவிருக்கும் அரச பயணத்தின் போது, ஜனாதிபதி அனுரகுமார முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி செப்டம்பர் 26 ஆம் திகதி ஜப்பானுக்குப் புறப்பட உள்ளார்.
அங்கு இருக்கும்போது, செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெறும் உலகப் பொருட்காட்சி சர்வதேச வர்த்தகக் கண்காட்சியிலும் அவர் கலந்துகொள்வார், மேலும் மூத்த ஜப்பானியத் தலைவர்களுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவார்.