போர் தொடுப்போம்… ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை… – Lanka Truth | தமிழ்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து கத்தார் மற்றும் துருக்கி தலையிட்டு மத்தியஸ்தம் செய்தன.

தோகாவில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே கடந்த 19 ஆம் திகதி போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதற்கிடையில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நேற்று துருக்கியின் இஸ்தான்புலில் தொடங்கியது.

இதன் முதல் நாளில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாவது, “இஸ்தான்புலில் ஆப்கானிஸ்தானுடன் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டாவிட்டால், பாகிஸ்தான் வெளிப்படையான போரைத் தொடங்கும். ஆனால், அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பதை நான் கண்டேன்.” என்றார்.


0

நன்றி

Leave a Reply