மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, கூறுகையில் கத்தார் நாட்டின் எரிவாயு உற்பத்தி அமைப்புகள் மீது அண்மையில் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக, கத்தாரின் ஏற்றுமதி திறன் 17 சதவீதம் அளவுக்கு பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், எரிவாயு வினியோகம், 3 – 5 ஆண்டுகளுக்கு பாதிக்கப்படும் என்று கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் கணிப்பு தெரிவிக்கிறது,.
ஆண்டுக்கு 1.28 கோடி டன் வரை உற்பத்தி முடங்கக்கூடும் எனவும் இது, ஆண்டுக்கு 1,700 கோடி கன மீட்டர் அளவுக்கு நிகரானது எனவும் இது, ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் எதிரொலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பாதிப்பை அடுத்து, ‘போர்ஸ் மெஜர்’ எனும் அவசரகால அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கத்தாருடன் நீண்ட கால கொள்முதல் செய்த நாடுகளுக்கு, ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுக்கு பதிலாக, சாத்தியமுள்ள அளவே சரக்கு அனுப்பப்படும்.
இன்றைய சூழ்நிலை தற்காலிகமானதாக அல்லாமல், அடிப்படை கட்டமைப்பில் ஏற்பட்ட விரிசலாகவே பார்க்கப்படுவாதாகவும் தெரிவித்துள்ளது.
உலகின் மிக நம்பகமான இயற்கை எரிவாயு வினியோக நாடாக கத்தார் பார்க்கப்படுகிறது.
அதன் வினியோக அளவு குறையும்போது இந்தியா உள்ளிட்ட நேரடி ஒப்பந்த நாடுகள் உடனடியாக பாதிக்கப்படும்.
குறிப்பாக ஆசியா மற்றும் ஐரோப்பாவில் எரிவாயு விலை உயரும்.
நேரடி ஒப்பந்தம் செய்யாத நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகும்.
குறுகிய காலத்தில் ஒட்டு மொத்த எரிவாயு அளவுக்கும் மாற்று வழியை கண்டுபிடிக்க முடியாது என்பதால், கட்டமைப்பின் அடிப்படையில் இந்தியா பலவீனமாக இல்லை என்றாலும் நேரடி பாதிப்பு கணிசமான அளவில் ஏற்படும் என்கின்றனர் வல்லுநர்கள்.
