யாழ்.கைதடியில் மரக்குற்றிகளைக் கடத்த முற்பட்டவர் கைது!











யாழ்.கைதடியில் மரக்குற்றிகளைக் கடத்த முற்பட்டவர் கைது! – Athavan News


































யாழ். கொடிகாமம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதடி பகுதியில் நேற்று (20) வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்  அங்கு பயணித்த சிறிய ரக லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். ​

இதன்போது மரக்குற்றிகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தை சந்தேகநபர் தம்வசம் வைத்திருக்கவில்லை எனத்  தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பல இலட்சம் மரக்குற்றிகளை சட்டவிரோதமாக கடத்த முற்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சாரதியைக் கைது செய்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply