வக்பு சட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் – அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவிப்பு  | All India Muslim Personal Law Board announced continued protest against the Waqf Act

சென்னை: அனைத்​திந்​திய முஸ்​லிம் தனிநபர் சட்ட வாரி​யத்தின் ஒருங்​கிணைப்​பாளர் இப்னு சஊத், அதன் உறுப்​பினர் மற்​றும் மனிதநேய மக்​கள் கட்சி தலை​வர் எம்​.எச்​.ஜ​வாஹிருல்லா ஆகியோர் அறி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக, சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது: வக்பு திருத்​தச் சட்​டம் தொடர்​பான வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய இடைக்​கால தீர்ப்​பில்,மத்​திய வக்பு குழு​மத்​தின் உறுப்​பினர்​களில் அதி​கபட்​சம் 4 முஸ்லிம் அல்​லாதோர், மாநில வக்பு வாரி​யங்​களில் அதி​கபட்​சம் 3 முஸ்​லிம் அல்​லாதோர் இருக்​கலாம் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

அறநிலை​யத் துறை அல்​லது குருத்​வாரா நிர்​வாகத்​தில் அம்மதத்தைச் சாராதவர்​கள் உறுப்பினர்​களாக ஆக முடி​யாத நிலை​யில், வக்பு வாரி​யத்​தில் மட்​டும் முஸ்​லிம் அல்​லாத உறுப்​பினர்​களை இணைக்க வேண்​டும் என்​பது பாரபட்​ச​மானது.

அதே​போல், வக்பு செய்​வதற்கு ஒரு​வர் குறைந்​தது 5 ஆண்​டு​கள் இஸ்​லாத்தை பின்​பற்​றிய​வ​ராக இருக்க வேண்​டும் என்ற திருத்​தப்​பட்ட விதியை உச்ச நீதி​மன்​றம் தற்​காலிக​மாக நிறுத்தி வைத்​திருந்​தா​லும், இஸ்​லாத்தை பின்​பற்​றும் முஸ்​லிம் யார் என்​பது பற்​றிய விதி​முறை​களை வரையறை செய்​யும் உரிமை மாநில அரசுகளுக்கு தரப்​பட்​டுள்​ளதும் ஆபத்​தானது.

வக்பு திருத்த சட்​டம், வக்பு சொத்​துகளை முற்​றி​லும் அபகரிக்க திட்​ட​மிட்டு செய்​யப்​பட்ட சதி​யாகும். இதுதொடர்​பாக இந்​தி​யா​வில் உள்ள அனைத்து மாநில முதல்​வர்​களை​யும் சந்​தித்து விளக்​கமளிக்க உள்​ளோம்.

இந்​தச் சட்​டத்தை முழு​மை​யாக ரத்து செய்து வக்பு சட்​டம் 2013-ஐ நடை​முறைப்​படுத்த வேண்​டும் என்​பதை வலி​யுறுத்தி நாடெங்​கும் மாவட்ட அளவி​லான விழிப்​புணர்வு போராட்​டங்​கள், மாநாடு​கள், பேரணி​கள், சிறை நிரப்​பும் தொடர் போராட்​டங்​களை நடத்​த​வும் அனைத்​திந்​திய முஸ்​லிம் தனிநபர் சட்ட வாரி​யம் திட்​ட​மிட்​டுள்​ளது. அதன் முடி​வில் டெல்லி ராம்​லீலா மைதானத்​தில் மாபெரும் பொதுக்​கூட்​டம் நவ.16-ம் தேதி நடத்​தப்​படும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறி​னார்​.

நன்றி

Leave a Reply