விளக்கமறியலில் வைக்கப்பட்ட சஷீந்திர ராஜபக்ஷ, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணங்களால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (05) பிற்பகல், வைத்திய ஆலோசனையின் பேரில் அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மக்கள் கலவரத்தின்போது அவரது அரசியல் அலுவலகம்அழிக்கப்பட்டதற்காக, இழப்பீடாக 8.85 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாகப் பெற்றதாகக் கூறப்படும் ஒரு ஊழல் குற்றச்சாட்டின் பேரில், சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

நன்றி

Leave a Reply