அக்டோபரில் இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.14,610 கோடி முதலீடு | Foreign investors invested Rs 14610 crore in Indian stock market in Oct

மும்பை: அன்​னிய முதலீட்​டாளர்​கள் தொடர்ந்து மூன்று மாதங்​களாக ரூ.77,000 கோடி மதிப்​பிலான முதலீட்டை இந்​திய பங்​குச் சந்​தையி​லிருந்து திரும்ப பெற்ற நிலை​யில், கடந்த அக்​டோபரில் ரூ.14,610 கோடியை அவர்​கள் முதலீடு செய்​துள்​ளனர். பாரின் போர்ட்​போலியோ இன்​வெஸ்​டார் (எப்​பிஐ) எனும் அன்​னிய முதலீட்​டாளர்​கள் பல்​வேறு காரணங்​களால் இந்​திய பங்​குச் சந்​தை​யில் இருந்து கடந்த மூன்று மாதங்​களாக கணிச​மான அளவில் முதலீட்டை திரும்ப பெற்​றனர்.

அதன்​படி, ஜூலை​யில் ரூ.17,700 கோடி, ஆகஸ்​டில் ரூ.34,990 கோடி, செப்​டம்​பரில் ரூ.23,885 கோடி என ரூ.77,000 கோடி மதிப்​பிலான தொகையை எப்​பிஐ வெளியே எடுத்​தனர். இந்த நிலை​யில், கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் செயல்​பாடு ஊக்​கம்​பெற்று வரு​வாய் அதி​கரிப்பு, அமெரிக்க மத்​திய வங்கி வட்டி விகித குறைப்பு எதிர்​பார்ப்பு மற்​றும் அமெரிக்​கா-இந்​தியா இடையே வர்த்தக பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​படிக்கை கையெழுத்​தாகும் என்ற நம்​பிக்கை ஆகியவை வெளி​நாட்டு முதலீட்​டாளர்​களின் கவனத்தை ஈர்த்​துள்​ளது.

அதன் காரண​மாக, அவர்​கள் கடந்த அக்​டோபர் மாதத்​தில் ரூ.14,610 கோடியை இந்​திய பங்​குச் சந்​தைகளில் முதலீடு செய்​துள்​ளனர். பங்​குச் சந்​தை​யில் அண்​மைக்​கால​மாக முதலீட்டு வரத்து அதிரித்​துள்ள போ​தி​லும், அன்​னிய முதலீட்​டாளர்​கள் 2025-ல் இது​வரை​யில் ரூ.1.4 லட்​சம் கோடி அளவி​லான முதலீட்டை பங்​குச் சந்​தை​யில் இருந்து திரும்​பப் பெற்​றுள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

நன்றி

Leave a Reply