அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதென கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பேரிடர் மேலாண்மை அவசர இலக்கத்திற்கு (1926) கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வெள்ளம் மற்றும் மின் தடை காரணமாக இறைச்சி மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக மாறியதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளாகத்தை ஆய்வு செய்து முழு இருப்புக்கும் சீல் வைத்ததாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸா தெரிவித்துள்ளார்.
மேலும் இறைச்சியின் மாதிரிகள் அரச ஆய்வாளர்களுக்கு சோதனைகளுக்காக அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
