அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அடுத்த தாக்குதல்: இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி – முழு விவரம் | 100 percent tax on import of Indian medicines

வாஷிங்டன்: இந்​தியா உட்பட வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் மருந்​துப் பொருட்​களுக்கு அக்​டோபர் 1-ம் தேதி முதல் 100 சதவீத வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

ஏற்​கெனவே இந்​தி​யப் பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மருந்​துப் பொருட்​களுக்கு 100 சதவீத வரி விதிக்​கப்​பட்டிருப்பது அமெரிக்க அதிபரின் அடுத்த தாக்​குதலாக பார்க்​கப்​படு​கிறது.

அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்​பேற்​றார். அவர் பதவி​யேற்​றது முதல், பல்​வேறு நாடு​கள் மீது சரமாரி​யாக இறக்​குமதி வரி விதிப்பை அறி​வித்து வரு​கிறார். இந்​தி​யா, சீனா உட்பட பல்​வேறு நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு கூடு​தல் வரியை​யும் அவர் அறி​வித்​தார்.

முதலில் இந்​தி​யப் பொருட்​களுக்கு 25 சதவீத வரியை விதித்த ட்ரம்ப், ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் கொள்​முதல் செய்​வதை நிறுத்த வேண்​டும் என்​றும் அறி​வித்​தார். இந்​தியா அதை ஏற்காத​தால், கூடு​தலாக 25 சதவீத வரியை இந்​தியா மீது விதித்​தார். இதனால், இறக்​குமதி செய்​யப்​படும் இந்​தி​யப் பொருட்​களுக்கு அமெரிக்​கா​வில் 50 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது. இதனால், இந்​தியா – அமெரிக்கா இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டுள்​ளது.

பேச்​சு​வார்த்தை தீவிரம்: இதற்​கிடையே, வர்த்​தகம் தொடர்​பாக அமெரிக்க அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்த மத்​திய வர்த்​தகம், தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்​றுள்​ளார். அவருடன் வர்த்​தகத் துறை சிறப்பு செயலர் ராஜேஷ் அகர்​வால் உள்​ளிட்ட மூத்த அதி​காரி​களும் சென்​றுள்​ளனர். அமெரிக்க அரசின் வர்த்​தகத் துறை அமைச்​சருடன், மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யுள்​ளார். தொடர்ந்து வர்த்​தகம் மற்​றும் வர்த்​தகம் சாராத விவ​காரங்​கள் குறித்து பல்​வேறு கட்​டங்​களாக பேச்​சு​வார்த்​தைகள் நடத்​தப்​பட்டு வரு​வ​தாக மத்​திய அரசு அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

பேச்​சு​வார்த்​தையை முடித்​து​விட்டு மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் தலை​மையி​லான குழு​வினர் இந்த வார இறு​தி​யில் இந்​தியா திரும்ப உள்​ளனர். கடந்த 4 ஆண்​டு​களாக இந்​தி​யா​வின் மிகப்​பெரிய வர்த்தக கூட்​டணி நாடாக அமெரிக்கா இருந்து வரு​கிறது. இந்​தி​யா​வின் மொத்த பொருட்​கள் ஏற்​றும​தி​யில் அமெரிக்கா​வுக்​கான ஏற்​றுமதி சுமார் 18 சதவீத​மாக​வும், இறக்​குமதி 6.22 சதவீத​மாக​வும் உள்​ளது. இந்​தி​யா​வின் மொத்த வணிக வர்த்​தகத்​தில் 10.73 சதவீதம் அமெரிக்​காவை சார்ந்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

இந்த சூழலில், வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் மருந்​துப் பொருட்​களுக்கு 100 சதவீத வரி விதிப்​ப​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்​தினம் திடீரென அறி​வித்​துள்​ளார். அதே​நேரம், அந்த மருந்து நிறு​வனங்​கள் அமெரிக்​கா​வில் தொழிற்​சாலைகளை அமைத்​திருந்​தால் அந்த நிறு​வனங்​களுக்கு இந்த வரி பொருந்​தாது என்​றும் அறி​வித்​துள்​ளார்.

மேலும், சமையலறை உபகரணங்​கள், குளியலறை, கழிப்​பறை உபகரணங்​கள் மீது 30 சதவீத இறக்​குமதி வரி, பர்​னிச்​சர் பொருட்​கள் மீது 25 சதவீத இறக்​குமதி வரி விதிக்​கப்​படு​வ​தாக​வும் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். இந்த கூடு​தல் இறக்​குமதி வரி விதிப்பு அக்​டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்​ளது.

மருந்து நிறு​வனங்​களுக்கு பாதிப்பு: ட்ரம்​பின் இந்த அறி​விப்​பால் இந்​திய மருந்து தயாரிப்பு நிறு​வனங்​கள் பெரும் பாதிப்பை சந்​திக்​கும் என தெரி​கிறது. அமெரிக்கா உடனான வர்த்​தகத்தை மிக​வும் சார்ந்​திருக்​கும் உள்​நாட்​டுத் தொழில்​களில் ஒன்​றான இந்​தி​யா​வின் மருந்து துறை, ட்ரம்​பின் இந்த திடீர் தாக்​கு​தால் பெரிய அளவில் பாதிக்​கப்​படும் என்று கூறப்​படு​கிறது.

கடந்த ஆண்டு அமெரிக்கா​வுக்கு ரூ.31 ஆயிரம் கோடி மதிப்​பிலான மருந்​துகளை இந்​திய நிறு​வனங்​கள் ஏற்​றுமதி செய்​துள்​ளன. இந்த ஆண்​டின் முதல் பாதி​யில் மட்​டும் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்​பிலான மருந்​துகள் அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்​யப்​பட்​டிருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இரு நாட்டு வர்த்​தகம் தொடர்​பாக அமெரிக்க அதி​காரி​களு​டன் இந்​திய குழு​வினர் பேச்​சு​வார்த்தை நடத்​திவரும் நிலை​யில், நல்ல செய்தி வரும் என இந்​திய வர்த்​தகர்​கள் எதிர்​பார்த்​திருந்​தனர். ஆனால், மருந்​துப் பொருட்​களுக்கு அமெரிக்கா 100 சதவீத வரி வி​தித்​திருப்​பது வர்த்​தகர்​களிடம்​ அதிர்ச்​சி​யை​யும், ஏமாற்​றத்​தை​யும்​ ஏற்​படுத்​தியுள்​ளது.

நன்றி

Leave a Reply