அமெரிக்க ஜனாதிபதியின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வீட்டில் சோதனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் (John Bolton), இந்தியா மீதான ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கையைக் கடுமையாக விமர்சித்திருந்தா நிலையில் அவரது வீட்டில் அந்நாட்டு மத்தியப் புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதார அழுத்தத்தை உருவாக்க இந்தியாவுக்கு ட்ரம்ப், 50 சதவீத வரி விதித்தமை அமெரிக்காவுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் “ட்ரம்பின் இத்தகைய செயல்கள் நம் நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகின்றன” என்றும் ஜோன் போல்டன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்கள், மத்தியப் புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்த ஆதாரங்களைச் சேமித்து வைத்திருந்ததாகக் கூறி, ஜோன் போல்டனின் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்தியப் புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply