உடன் அமுலாகும் வகையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் நிறுத்தப்படும் என கட்டார் வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் குறித்த இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கட்டார் வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் ஆட்சிக்கு கீழ் வந்ததிலிருந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையேயான மோதல் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த வாரத்தில் அது மேலும் தீவிரமடைந்து பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் கட்டார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் நேற்று(18) நடைபெற்ற ஒரு சுற்று பேச்சுவார்த்தைகளின் போது இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக கட்டார் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
