இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை இதய ஸ்டென்ட்​டுக்கு உலகளா​விய அங்​கீ​காரம் கிடைத்​துள்​ளது | New generation heart stent made in India receives global approval

சான்​பி​ரான்​சிஸ்கோ: இதய சிகிச்சை நிபுணர்​களின் உலகளா​விய மாநாடு அமெரிக்​கா​வின் சான்​பி​ரான்​சிஸ்​கோ​வில் நேற்று முன்​தினம் முடிவடைந்​தது. இதில் டெல்லி பத்ரா மருத்​து​வ​மனை டீனும், இதய சிகிச்சை நிபுணரு​மான டாக்​டர் உபேந்​திர கவுல், டுக்​ஸ்​டோ-2 என்ற பெயரில் இந்தி​யா​வில் மேற்​கொள்​ளப்​பட்ட பரிசோதனை முடிவு​களை தாக்​கல் செய்​தார். இந்த பரிசோதனை டாக்​டர் கவுல் தலை​மை​யில் நடை​பெற்​றது. இதில் துணைத் தலை​வ​ராக பெங்​களூரைச் சேர்ந்த டாக்​டர் பால், திட்ட இயக்​குன​ராக டாக்​டர் பிரியதர்​ஷினி​யும் பணி​யாற்​றினர்.

இந்த பரிசோதனை​யில் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை இதய ஸ்டென்ட் ‘சுப்​ராப்​ளக்ஸ் க்ரஸ்’ மற்​றும் சர்​வ​தேச சந்​தை​யில் கிடைக்​கும் அமெரிக்க தயாரிப்பு ‘ஜீயன்​ஸ்’ இதய ஸ்டெண்ட்​டும் தீவிர​மாக ஒப்​பிடப்​பட்​டது. அப்​போது டாக்​டர் கவுல் கூறிய​தாவது:

இந்​தி​யா​வில் 66 இதய சிகிச்சை மையங்​களில் இந்த பரிசோதனை நடத்​தப்​பட்​டது. நீரிழிவு மற்​றும் இதயத்​துக்கு ரத்​தம் செலுத்​தும் 3 முக்​கிய

நாளங்​களி​லும் அடைப்பு உள்​ளவர்​களுக்கு இந்​திய தயாரிப்பு ஸ்டென்ட் பொருத்தி பரிசோ​திக்​கப்​பட்​டது. இவர்​களில் 80 சதவீதம் பேர், 3 முக்​கிய ரத்த நாளங்​களி​லும் அடைப்பு உள்​ளவர்​கள். இந்த பரிசோதனை இந்​திய தயாரிப்பு ‘சுப்​ராபிளக்ஸ் க்ரஸ்’ ஸ்டென்ட், சர்​வ​தேச தரத்​திலான ஸ்டென்ட்​டுக்கு எந்​த​விதத்​தி​லும் குறைவு இல்லை என்​பதை நிரூபித்​தது. குஜ​ராத்​தின் சூரத் நகரில் இந்த ஸ்டென்ட் தயா​ராகிறது. இவ்​வாறு டாக்​டர் கவுல் கூறி​னார்.

நன்றி

Leave a Reply