இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown) அமுல்படுத்தப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri) திட்டவட்டமாக நேற்று தெரிவித்தார். மத்திய கிழக்கு போர்ச்சூழலால் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு, கொரோனா காலத்தில்போன்று பொது முடக்கம் அமுல்படுத்தப்படவுள்ளது என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையிலேயே மேற்படி தகவல்களை மத்திய […]
