இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல் | Russia considers to provide Additional S-400 missiles for India

மாஸ்கோ: இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக எஸ்​-400 ஏவு​கணை​கள் வழங்​கு​வதற்​கான வாய்ப்​பு​கள் குறித்து ஆலோ​சித்து வரு​வ​தாக ரஷ்ய ராணுவத்​தின் தொழில்​நுட்ப பிரிவு தலை​வர் டிமிட்ரி சுகாயேவ் தெரி​வித்​துள்​ளார்.

ரஷ்​யா​விடம் இருந்து அதிநவீன எஸ்​-400 வான் பாது​காப்பு ஏவு​கணை​களை 5.4 பில்​லியன் டாலருக்கு வாங்க இந்​தியா கடந்த 2018-ம் ஆண்டு ஒப்​பந்​தம் செய்​தது. அதன்​படி இந்​தி​யா​வுக்கு வழங்​கப்​பட்ட எஸ்​-400 ஏவு​கணை​களும், உள்​நாட்டு தயாரிப்பு வான் பாது​காப்பு ஏவு​கணை​களும் இணைந்து ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யில் பயன்​படுத்​தப்​பட்​டன. இவை, பாகிஸ்​தானில் இருந்து ஏவப்​பட்ட ஏவு​கணை​கள் மற்​றும் ட்ரோன்​களை நடு​வானில் அழித்​தன. இதனால் இந்​தி​யா​வுக்கு எந்த பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை.

அதே​போல் இந்​தியா – ரஷ்யா கூட்டு தயாரிப்​பில் உரு​வான பிரம்​மோஸ் ஏவு​கணை​களும் பாகிஸ்​தான் விமானப்​படை தளங்​கள் மற்​றும் தீவிர​வாத முகாம்​களை அழித்​தன. இதனால் பாகிஸ்​தான் சண்டை நிறுத்​தத்​தக்கு முன் வந்​தது.

இந்​நிலை​யில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக இந்​திய பிரதமர் மோடி சீனா சென்​றிருந்​தார். அங்கு ரஷ்ய அதிபர் புதினை சந்​தித்து பேசி​னார். இந்த பேச்​சு​வார்த்தை நடந்த இடத்​துக்கு அதிபர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் தனது காரில் அழைத்​துச் சென்​றார். இரு தலை​வர்​களும் இரு தரப்பு ராணுவ மற்​றும் வர்த்தக உறவு​களை மேம்​படுத்​து​வது குறித்து பேசினர்.

இதையடுத்து ரஷ்ய ராணுவத்​தின் தொழில்​நுட்ப ஒத்​துழைப்பு பிரிவு தலை​வர் டிமிட்ரி சுகாயேவ் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது.

இந்​தி​யா​விடம் ரஷ்​யா​வின் எஸ்​-400 ஏவு​கணை​கள் ஏற்​கெனவே உள்​ளன. இதை விரிவுபடுத்​தும் வாய்ப்​பு​கள் உள்​ளன. இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக எஸ்​-400 ஏவு​கணை​களை வழங்​கு​வது குறித்து நாங்​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறோம். ரஷ்​யா​வின் சுகோய்​-57 ரக போர் விமானங்​களை இந்​தி​யா​வுக்கு விற்​பது குறித்​து இரு ​நாடு​களும்​ பேச்​சு​வார்​த்​தை நடத்​தி வரு​கிறோம்​​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

நன்றி

Leave a Reply