இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் பாதிப்படையும் வடமராட்சி மீனவர்கள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் அத்துடன் யாழில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளும் தற்போது அதிகரித்து வருதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் யாழ் மாவட்ட மீனவர்களின் வலைகள் சேதமாக்கப்படுவதாக வடமராட்சி கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இந்திய இழுவைப்படகுகளால் அறுத்துச் செல்லப்படுவதாகவும் குறிப்பாக தமது வலைகள் காணாமல்போவதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவும் இந்திய மீனவர்களது இழுவைப்படகுளின் எல்லை தாண்டிய மீன்பிடியால், பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்றொழிலாளர்களது வலைகள் அழிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் உள்ளூரில் சட்டவிரோத மீன்பிடியான சுருக்குவலைத் தொழில் நடவடிக்கை தற்போது அதிகரித்துள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாக பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே கடற்தொழில் அமைச்சர் இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

நன்றி

Leave a Reply