இந்திய விமானப்படைக்கு மகுடம்: 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்!

இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, பிரான்ஸிடமிருந்து 114 ரஃபேல் (Rafale) போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் மெகா திட்டத்திற்குப் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகப் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:

• மதிப்பு: சுமார் ₹3.25 லட்சம் கோடி ($35 – $39 பில்லியன்).

• விமானங்களின் எண்ணிக்கை: மொத்தம் 114 மல்டிரோல் போர் விமானங்கள்.

• உள்நாட்டுத் தயாரிப்பு (Make in India): இந்த ஒப்பந்தத்தின் கீழ், 18 விமானங்கள் பிரான்ஸிலிருந்து நேரடியாக (Fly-away condition) வரவழைக்கப்படும். மீதமுள்ள 96 விமானங்கள் இந்தியாவில் டாடா (Tata) நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன.

இதில் 88 ஒற்றை இருக்கை கொண்ட போர் விமானங்களும், 26 இரட்டை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்களும் அடங்கும். தற்போது இந்திய விமானப்படையிடம் 29 ஸ்குவாட்ரன்கள் (Squadrons) மட்டுமே உள்ளன. அனுமதிக்கப்பட்ட 42 ஸ்குவாட்ரன்கள் என்ற இலக்கை அடைய இந்த 114 விமானங்கள் பெரும் பலமாக இருக்கும். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அதிநவீன போர் விமானத் தொழில்நுட்பங்கள் இந்தியாவிற்குப் பரிமாற்றம் செய்யப்படும். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் (Emmanuel Macron) பிப்ரவரி 17-19 தேதிகளில் இந்தியா வரவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியாவிடம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ள நிலையில், புதிய வரவுகள் இந்திய எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

________________________________________

நன்றி

Leave a Reply