இலங்கை வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி! – Athavan News

சர்வதேச டி:20 தொடருக்காக பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி நேற்று மாலை (05) இலங்கையை வந்தடைந்தது.

அதன்படி, அந்த அணி மாலை சுமார் 5:15 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அவர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர். 

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் பிரதிநிதிகளும் வரவேற்பில் பங்கேற்றனர்.

புதன்கிழமை தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் இலங்கையும் பாகிஸ்தானும் போட்டியிட உள்ளன.

பாகிஸ்தான் அணியின் இந்த சுற்றுப்பயணம் அரசாங்கத்தின் ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்தை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அதன்படி, இந்தத் திட்டம் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தத் தொடர் முழுவதும் பல முயற்சிகள் செயல்படுத்தப்படும்.

 பாகிஸ்தான் இலங்கை சுற்றுப்பயணத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை அரசாங்கத்தின் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிக்கு நன்கொடையாக வழங்குவதும் இதில் அடங்கும்.

இலங்கையை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் காண்பிக்க, போட்டி நடைபெறும் இடங்களில் #VisitSriLanka என்ற ஹேஷ்டேக்கையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விளம்பரப்படுத்தும்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 7, 9 மற்றும் 11 ஆகிய திகதிகளில் நடைபெறும்.

அனைத்துப் போட்டிகளும் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

May be an image of one or more people and accordion

No photo description available.

May be an image of one or more people, beard and people smiling

நன்றி

Leave a Reply