ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.
தெஹ்ரானில் உள்ள பிரதான மயானங்களில் அமெரிக்க இராணுவ வீரர்களுக்காகப் பல்லாயிரக்கணக்கான சவக்குழிகள் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வான்வழித் தாக்குதல்களைத் தாண்டி, அமெரிக்க வீரர்கள் ஈரானிய மண்ணில் கால் வைத்தால், அது அவர்களின் வாழ்வின் இறுதித் தருணமாக அமையும் என ஈரானிய அரசியல் தலைவர் மற்றும் Tehran City Council துணைத் தலைவர் Parviz Sarvari அமெரிக்காவை நோக்கி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெப்ரவரி – மார்ச் பதற்றம்: கடந்த 2026 பெப்ரவரி இறுதி முதல் தற்போது மார்ச் 06 ஆம் திகதி வரை இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிக மோசமடைந்துள்ளன.
The post ஈரானின் எச்சரிக்கை: “அமெரிக்க வீரர்களுக்குச் சவக்குழிகள் தயார்!” appeared first on Global Tamil News.
