ஈரான் விவகாரம்: புடினின் கோரிக்கையை நிராகரித்தார் ட்ரம்ப்! போர்பதட்டம் பன்மடங்கானது!

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு முயற்சியாக, ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) ரஷ்யாவிற்கு மாற்றுவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்வைத்த யோசனையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக நிராகரித்துள்ளார்.
இந்த வாரத் தொடக்கத்தில் (2026 மார்ச் 9, திங்கட்கிழமை) இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்தத் திட்டம் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக ஈரானிடம் உள்ள 60% வரை செறிவூட்டப்பட்ட சுமார் 450 கிலோகிராம் யுரேனியத்தை ரஷ்யாவிற்குப் பாதுகாப்பாக மாற்றுவதன் மூலம், தற்போதைய பதற்றத்தைத் தணிக்கலாம் என புடின் யோசனை வழங்கினார்.
ஆனால் “யுரேனியம் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது; மோசமான உடன்படிக்கைகளுக்கு ஒருபோதும் இடமில்லை” எனக் கூறி ட்ரம்ப் இதனை மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் ஈரானின் அணுசக்தித் தளங்களைக் கைப்பற்ற அல்லது யுரேனியத்தைக் கைப்பற்ற அமெரிக்காவின் சிறப்புப் படைகள் அனுப்பப்படலாம் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இந்த நிராகரிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

The post ஈரான் விவகாரம்: புடினின் கோரிக்கையை நிராகரித்தார் ட்ரம்ப்! போர்பதட்டம் பன்மடங்கானது! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply