கடந்த அக்டோபர் 2024 இல் பதின்ம வயதுப் பெண் ஒருவர் மற்றொரு 15 வயதுடைய ரீஸ் ஸ்டான்செலை என்பவரை கொலை செய்ததற்காகக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் பெயரிட முடியாத இந்தப் பெண், ஆரம்பத்தில் இரண்டாம் நிலை கொலைக்காகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், அது பின்னர் முதல் நிலை கொலையாக மேம்படுத்தப்பட்டது.
நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட ஒரு அறிக்கையின்படி, அவள் ஸ்டான்செலைக் கொல்வதற்குத் திட்டமிட்டு, அவனை வனப்பகுதிக்கு இட்டுச் சென்று, பேஸ்பால் மட்டையால் தாக்கி, கூர்மையான ஆயுதத்தால் குத்திக்
கொலை செய்துள்ளார்.
பின்னர் அவளுடைய வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு குறிப்பில், “நான் அவன் தலையில் அடித்தேன். நான் அவனைக் கொன்றுவிட்டேன்” என்று அவள் எழுதியிருந்தமை கண்டறியப்பட்டது.
இதேவேளை, இந்த சம்பவத்தில் 15 வயதுடைய ஒருவரின் மரணத்தில் பதின்ம வயதுடைய ஒருவன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டமையினால் பெர்த் குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
