ஒரே நாளில் ரூ.299 கோடி அதிகரித்த அதானியின் சொத்து மதிப்பு! | Adani s assets increased by Rs 299 crore in a single day

மும்பை: அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு வெள்ளிக்கிழமை அன்று பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டது. அதன் பலனை அதானி குழுமத்தின் நிறுவன தலைவரான கவுதம் அதானி அறுவடை செய்துள்ளார்.

அவரது சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.299 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கவுதம் அதானி. 63 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 87.4 பில்லியன் டாலர்கள்.

இந்த சூழலில் அதானி குழு​மத்​தில் மோசடி அல்​லது நியாயமற்ற வர்த்தக நடை​முறை எது​வும் நடை​பெற​வில்லை என்பதைக் குறிப்​பிட்​டு, அதானி குழு​மத்​திற்கு எதி​ரான அனைத்து குற்​றச்​சாட்​டு​களை​யும் இந்​தி​யப் பங்கு மற்​றும் பரிவர்த்​தனை வாரி​யம் (செபி) நிராகரித்​துள்​ளது.

அ​தானி குழு​மம் பல்​வேறு முறை​கேடு​களில் ஈடு​படு​வ​தாக அமெரிக்​காவை சேர்ந்த ஹிண்​டன்​பர்க் நிறு​வனம் கடந்த 2023-ம் ஆண்டு குற்​றம் சாட்​டியது. அதையடுத்து அதானி குழும பங்குகளின் விலை மற்றும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சரிந்தது. இந்நிலையில், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என செபி கூறியது. இதை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகளின் விலை உயர்ந்தது.

நன்றி

Leave a Reply