கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி நிதி மோசடி! – Athavan News

கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி 1.49 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் நேற்று (9) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் பணியகத்தில் கைது செய்யப்பட்டார்.

சிங்ஹாரகே ஜனக சில்வா என்ற நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர் நிரந்தர வதிவிடத்திற்காக கனடாவில் குடியுரிமை பெற்றவர்.

குறித்த சந்தேக நபர் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பலரிடமிருந்து மோசடியாக பணம் பெற்றுள்ள நிலையில் மோசடியால் பாதிக்கப்பட்ட பத்து பேர் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

அதன்படி, பணியகம் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேக நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர் நேற்று பணியகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பிற்காக பணம் மோசடி செய்தல் மற்றும் மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (10) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply