கம்பஹாவில் நாளை 10 மணி நேர நீர் துண்டிப்பு – Oruvan.com

கம்பஹா மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொட இணைந்த நீர் விநியோக அமைப்பின் நிட்டம்புவவிலிருந்து மினுவங்கொட வரையிலான குழாய் சுத்திகரிப்பு மற்றும் கிருமி நீக்கம் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரன்பொகுணகம, படலிய, அத்தனகல்ல, பஸ்யால, நிட்டம்புவ ஆகிய பகுதிகளில் நாளை காலை 10:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை 10 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இதற்கமைய நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கொங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்தை, கொலவத்தை, கொரக்கதெனிய, ரன்பொகுணகம, ரன்பொகுணகம வீடமைப்புத் திட்டம், படலிய, அத்தனகல்ல, பஸ்யால, ஊராபொல, திக்கந்த, மவிட்டிகம்மன மாஇம்புல, மாதலான, ஹக்கல்ல, அலவல, கலல்பிட்டி, எல்லமுல்ல ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கம்பஹாவில் நாளை 10 மணி நேர நீர் வெட்டு

நன்றி

Leave a Reply