களனிவெளி மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் பாதிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை கொஸ்கம மற்றும் அவிசாவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால், அந்தப் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த ரயில் மீள தடமேற்றப்பட்டு அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகள் வழமை போல் இடம்பெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
