காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

காத்தான்குடி பிரதேச சுற்றுலாத்துறையை மேம்படுத்த அல் அக்ஸா பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து பார்வையிட்டபோதே இதனை தெரிவித்தார்.


உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான தேவையான வசதிகளை உருவாக்கும் நோக்கில் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இது காத்தான்குடி பிரதேசத்திற்கு ஒரு புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் எனவும், அபிவிருத்திப் பணிகளை விரைவாக ஆரம்பிக்கப்படுவதோடு, வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையுமாறு அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply