18
கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்துக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (07) காலை அதிகளவான தோட்டாக்கள் கிளிநொச்சி காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமாக அதகளவான தோட்டாக்கள் சிதறி காணப்பட்டதனை அவதானித்த பாடசாலை சமூகம் உடனடியாக கிளிநொச்சி காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளனர்.
அதனைதொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற காவல்துறையினா் மற்றும் இராணுவத்தினா் சிதறிக் காணப்பட்ட தோட்டாக்களை மீட்கும் பணியினை பாதுகாப்பான முறையில் மேற்கொண்டு சுமாா் 150ற்குமேற்பட்ட தோட்டாக்கள் மீட்டுள்ளனா். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிகவிசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.