குறுஞ்செய்திகளினூடாக சமூக ஊடகங்களில் பாரிய மோசடி

வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவும், கையடக்கத் தொலைபேசிகளின் மென்பொருளை மாற்றியமைப்பதற்காகவும் இந்த மோசடி செய்திகள் பகிரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக
அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசி மூலம் வங்கிச் சேவை செய்பவர்கள் இதுபோன்ற போலிச் செய்திகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply