கொழும்பில் அமைந்துள்ள ஒரு பிரபல ஆண்கள் பாடசாலையில் இரண்டாவது மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து மாணவன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ஒரு பிரபல ஆண்கள் பாடசாலையில் இரண்டாவது மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து மாணவன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (11.03.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். அவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மூடியிருந்த வகுப்பறைக்குள் ஜன்னல் வழியாக நுழைய முயன்றபோது மாணவன் தவறி விழுந்ததாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்று பள்ளியின் வருடாந்திர கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றதால் பெரும்பாலான மாணவர்கள் அதில் பங்கேற்றிருந்தனர். இதனால் வகுப்பறை மூடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.
